Monday, October 31, 2011

tittle is urs

வெட்ட வெட்ட வளரும் நகம் ...
நீ ஒருமுறை வெட்டி விட்டாய் நகத்தை அல்ல என் மனதை  
இன்னும் எனக்கு ஆறவில்லை அந்த ரணம் 

Friday, October 28, 2011

tittle is urs

நான் உன்னிடம் பேச வாய் திறக்கும் முன்னரே ,
என் மனம் பேச தொடங்கி விட்டது உன்னுடன் .
எனக்கு போட்டி வேறு யாரும் அல்ல 
இங்கு எனது மனதை தவிர!

Thursday, October 27, 2011

tittle is urs

உன் மூச்சுக்  காற்றுக் கூட   என் மீது பட்டதில்லை..
பின்பு எப்படி நீ என்னுள்  வந்தாய் ...

Tuesday, October 25, 2011

tittle is urs

சிரிக்கதெரிந்தவனுக்கு சிறகுகள் தேவை இல்லை 

Monday, October 24, 2011

tittle is urs

ஒருவரையும் கட்டாயப்படுத்தாதே 
முடிந்தால் உன் அன்பினால்  அவர்களை கட்டுப்படுத்து ...

Saturday, October 22, 2011

tittle is urs

எத்தனை பேர் உன்னை தொட்டாலும் இன்றும் 
களங்கம் இல்லாமல் நீ இருப்பது எப்படி = "வெற்றி" 

tittle is urs

வானில் பறக்க இல்லை  எனக்கு சிறகு ...
பேசி பழக நீ இருக்கும் போது 
உன் விரல்களே எனக்கு ஆகிறது   இறகு 
மழை மேகம் கண்டால் ஆடிடுதே  மயில்..
நீ பேசிய போது உணர்தேன் நீ ஒரு மஞ்சள் நிற குயில் ...

Friday, October 21, 2011

tittle is urs

கவிதையை படைபவரின் அறிவு திறனை விட
கவிதையை படிப்பவரின் அறிவுத்திறனே 
அந்த கவிதைக்கு உண்மையான மதிப்பை(அர்த்தத்தை)  கொடுக்கும் ...

Thursday, October 20, 2011

tittle is urs

பார்த்த பார்வையிலே என்னை கத்தரித்து சென்ற 
நீ ஒரு  வெட்டுகிளியோ!!! 

Wednesday, October 19, 2011

tittle is urs

என்னிடம் இருக்கும் உன் நினைவுகளை 
திரும்பி தர சொல்லி கேட்க்க நீ தயங்க வில்லை ...
என் ஆன்மாவிடம் போய் உன் நினைவுகளை 
அழிக்கும் படி சொல்ல   எனக்கு தைரியம் இல்லை... 

Tuesday, October 18, 2011

tittle is urs

சத்தம் இல்லாமல் அழ நினைத்தேன் அதன் விளைவு 
இன்று என்னை சுற்றி எல்லோரும் அழுகின்றனர் சத்தமாக  

tittle is urs

மனசு ஓடியும் போது சத்தம் கேட்பதில்லை....
ஆனால் இதயம் ஓடியும் போது அதில் ஓடும் ரத்தம் கேட்கும்
உன்னால் தானே இது எல்லாம் என்று இதயத்திடம் (யோசிக்காமல் நேசித்ததால் தானே இப்படி என்று ) ...

tittle is urs

பாசத்துக்கு அடிமையானவர்களே 
சோகத்தால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர் 
சொல்ல முடியாத வேதனைகளிலும் 
அவர்கள் பாசத்தை எதிர்ப்பதில்லை..
சோகத்தை வெறுப்பதில்லை ,..

Monday, October 17, 2011

tittle is urs

என்னோடு நீ இல்லை.. 
அதனால் தான் எனக்கு இங்கு தொல்லை.. 
இதற்குதான் ராமரும் ஓடிச்சார் வில்லை..
நான் இனி இந்த விளையாட்டுக்கு வரலை.  

Sunday, October 16, 2011

tittle is urs

நீ அழும் போது உன் கண்ணீரை துடைத்து விடும் 
எந்த உண்மையான  நண்பணும்... 
நீ  சிரிக்கும் நேரத்தில் அருகில் இருக்க நினைப்பதில்லை  

Friday, October 14, 2011

tittle is urs

மரணம் கூட என்னை அடிக்கடி நெருங்கி பார்க்க ஆசை கொள்கிறது ...
உன்னால்  ஏன் முடியவில்லை ...

tittle is urs

நீ என்னிடம் எதையுமே விரும்பி கேட்டதில்லை...
என் மௌனத்தை தவிர ...
என் மௌனம் என்னை கொன்றே விடும் என்று தெரியாமல் 

Thursday, October 13, 2011

tittle is urs

ஆசை பட்டது ஏதும் இன்னும் என் கை சேரவில்லை ..
என்னிடம் உள்ள எதன் மீதும் நான் ஆசை படவில்லை..
இருந்தும் பத்திரமாக வைத்து இருக்கிறேன் அவற்றை 
அதை  நேசித்த யாரோ அவற்றை  தேடிவரும் போது 
பத்திரமாக அவர்களிடம் கொடுப்பதற்காக !

Wednesday, October 12, 2011

tittle is urs

நான் நேசித்த எதுவும் என் அருகில் இன்று இல்லை ...
நல்ல வேலையாக  இன்னும் நான் என்னை நேசிக்க தொடங்கவில்லை ..
எல்லாம் நன்மைகே என்பது இதற்குத்தானா 

Tuesday, October 11, 2011

tittle is urs

உன் அன்பில் கலந்து இருக்க ஆசை பட்டேன் ..
நீயோ என்னை காற்றில் கலந்து இருக்கும் படி செய்து விட்டாய் ...
எரிந்து கொண்டிருக்கும் உடலில் இருந்து வந்த குரல் ..
யாருடையதோ பாவம் 

Monday, October 10, 2011

tittle is urs

என் கண்களால் நேரடியாக  பார்க்க முடியாத விஷயமாக  நான் நினைத்தது ஒன்று தான் 
அது என்  இதயம் 
இப்பொது உணர்ந்தேன்  
இரண்டு 
அதில் நான் செதுக்கிய உன் உருவம் 

Sunday, October 9, 2011

tittle is urs

உனக்கு நன்றிகள் சொல்ல என்னிடம் உள்ள வார்த்தைகள் போதாது ..
அதனால் என் நட்பையே பரிசாக கொடுக்கிறேன் உன் இதயத்துக்கு 

Saturday, October 8, 2011

tittle is urs

எத்தனை காலம் தவம் கிடந்தேனோ உன்னை பெறுவதற்கு 
இன்னும் எத்தனை காலம் வரம் கிடக்க வேண்டுமோ நீ இங்கு வருவதற்கு 

Friday, October 7, 2011

tittle is urs

உன் கண்களில் நான் என்னை பார்க்கும் போது 
எனக்கு வலிக்கவில்லை 
ஆனால் 
உன் கண்ணீர் துளிகளிலும் என்னை பார்த்த போது 
அந்த நிமிடம் எனக்கு மட்டும் அல்ல என் இதயத்துக்கும் வலித்தது 

Thursday, October 6, 2011

tittle is urs

துடி துடிக்கும் என் இதயத்தில்
பட படக்கும் உன் நினைவுகள் 
சல சலக்கும் என் கொலுசுகளை ரசிக்கும்..
சிலு சிலுக்கும் உன் பார்வை அசைவுகள் 

Wednesday, October 5, 2011

tittle is urs

நீ பேசிய வார்த்தைகள் நூறு ..
பேசாத மௌனத்தையும் என்னிடம் கூறு ..
மணல்  மேல் ஓடும் ஆறு ...
என் உயிர் நீ தான் திரும்பி பாரு . 

Tuesday, October 4, 2011

tittle is urs

என் கண்களால்   ஈர்த்துக்கொண்டு கனவுகளை
சேர்த்துவைக்கிறேன்  இதயத்தில் உன் நினைவுகளை 

Monday, October 3, 2011

tittle is urs

படித்த வரிகளை மறக்க முடியும் 
பிடித்தவர் சொன்ன வார்த்தைகளை மறக்க முடியுமா 
கசந்த காயை வெறுக்க  முடியும் 
சுவைத்த கனியை வெறுக்க முடியுமா 

Saturday, October 1, 2011

tittle is urs

நான் கண் திறந்தும் கனவுகள் காண்கிறேன்
அதிலும் நீ தான் ... 

tittle is urs

உன் மனதை திறந்து யாரிடம் உண்மையாக உன்னால் பேசமுடிகிறதோ
அவர்கள் தான் நீ கண்ணாடியின் முன் பார்க்கும் உன் பிம்பம் போன்றவர்கள் 
அவர்கள் மட்டுமே நீ அழ நினைத்தும்  தங்களது கண்களில் கண்ணீரை அணிந்து நிற்பர்

tittle is urs

வெட்கப்படும் போதெல்லாம் கேள்விகளை கேட்கிறாய் என்னை 
என் இதழ்கள் பதில்கள் சொல்ல மறுப்பதில்லை 
ஆனால் என்னில் ஏற்பட்ட வெட்கம் தடுக்கிறது பதிலை 

tittle is urs

என் கண்கள் உன்னை பார்க்கவேண்டும் என்று இமைக்கிறது ,,
என் இதயம் உன்னை பார்த்தல் யாரேனும் பிரித்துவிடுவார்களோ என்று துடிக்கிறது ..
இதில் எதை செய்வது என்று தெரியாமல் நான் தவிக்கிறேன் அமைதியாக  

tittle is urs

உன் விழிகளினாலே உண்கிறாய் என்னை ..
இருந்தும் முழுவதுமாய் நான் இங்கே ...

tittle is urs

சிரிப்பதற்காக கடவுள் உனக்கு கொடுத்த நேரத்தை 
அழுவதற்காக பயன் படுத்தாதே 
பணம்  கொடுத்து விலைக்கு  வாங்க நீ ஒன்றும் சிலை அல்ல 
என் இதயக் கடலில் அடித்துக்கொண்டிருக்கும்  அலை